கருப்பா இருக்கும் அக்குளை வெள்ளையாக்க - அரிசி ஸ்கரப்

கருப்பா இருக்கும் அக்குளை வெள்ளையாக்க - அரிசி ஸ்கரப்

இந்த ஸ்கரப் செய்வதன் மூலம், வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கரப் செய்வதால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விரைவில் வெள்ளையாகும்.

செய்யும் முறை

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அக்குளை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் கலந்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக 4-5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நன்மைகள்

அரிசி பவுடர் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அக்குள் வெள்ளையாகும் மற்றும் தேன் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.