மாதவிடாய் பிரச்சனையா?

மாதவிடாய் பிரச்சனையா?

 இதோ சூப்பரான சித்த மருத்துவம் !!!
தினசரி நாம் உண்ணும் உணவில் முறையான உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் பிரச்சனை நீங்க:
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும். ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
பித்தம் குறைய:
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.
வாந்தி நிற்க:
கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும். துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
ஆரோக்கியமான் கல்லீரல்:
தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
இதயத்திற்கு பலம்:
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல், இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையை போக்க:
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும். வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும்.
சிறுநீர் எரிச்சல் போக்க:
அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும். அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும். கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
குடல் புண் நீங்க:
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும். மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
சீரான ரத்த அழுத்தம்:
டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
பித்த வெடிப்பு மறைய:
அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும். வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.
பல் கூச்சம் நீங்க: \
துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும். இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும்.
கர்ப்பிணிகளின் பேறுகால வலி குறைய:
முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும். தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும் ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.
கண்வலி போக்க:
அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும். எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது.