பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க

பாதங்களில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க

தற்போது வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் வியர்வை. என்ன தான் வியர்வை ஒரு மணமற்ற திரவமாக இருந்தாலும், இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.
அதிலும் கால்களில் ஷூ போடுபவர்களின் பாதங்களை எடுத்துக் கொண்டால், எலி இறந்து போன நாற்றம் வீசும். இதனைத் தடுக்க தினமும் ஒருசில செயல்களை மாலையில் வீடு வந்ததும் செய்தால் போதும்.
கல் உப்பு மற்றும் தண்ணீர்
கல் உப்பு மற்றும் தண்ணீர் 1 கப் கல் உப்பை 10-12 கப் நீரில் போட்டு, அந்நீரில் பாதங்களை 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறுவதோடு, துர்நாற்றமும் தடுக்கப்படும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
1/2 வாளி நீரில் 1/4 கப் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, அக்கலவையில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.