பித்த வாய்வு.

பித்த வாய்வு...!!!

இந்நோய் உள்ளவர்களுக்கு மன நிலையில் மாற்றம் தோல் நிறம் மாற்றம் பாத வெடிப்பு உடல் தினவு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்

சீரகம் .... பத்து கிராம்
ஏலக்காய் .... பத்து கிராம்
திப்பிலி .... பத்து கிராம்
மிளகு .... பத்து கிராம்

நான்கு பொருட்களிலும் சம அளவு எடுத்து அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலைக் காய்ச்சி அத்துடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக் காய்ச்சி பாகு ஆக வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தூளைப் போட்டுக் கிளறி லேகியப் பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சேமிக்கவும்
தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து பத்து கிராம் அளவு லேகியத்தை சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர பித்த வாய்வு நோய் நீங்கும்