இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் பிராணயாமம்

இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் பிராணயாமம்!!!


‪#‎எண்ணிலடங்கா‬ ‪#‎சித்திகளை‬ ‪#‎பெற‬ ‪#‎பிராணயாமம்‬.
---------------------------------------------
-------------------------------
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின்
கருப்பையிலிருந்தே சுவாசிக்க
தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு
உயிருக் கும் வாழ்வில் இத்தனை சுவாசம்
என்ற கணக்கில் இருப்ப தாகவும்,
அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை
விட்டு நீங்கி விடுவ தாகவும் புராணங்கள்
சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச்
சரியான முறையி ல் கட்டுப்படுத்தி வாழ்ந்தால்
நீண்ட கா லம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ
முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள்
மூலம் எண்ணி லடங்கா சித்திகளை கூட பெற
முடியும் என் கிறார்கள் ரிஷிகள்.
மனித ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்று
வாசி எனப்படுகிறது. இந்த வாசியே பாற்கடல்
புராணத்தில் வாசுகி என்னும் நாகமாக சித்
தரிக்கப் படுகின்றது. பிராணன் எனப்படுவதும்
வாசியையே குறிக்கிறது. இந்த பிரா ணன்
எனப்படும் வாசியை இடம், வல மாக இழு த்து
பல தொழில் செய்து கட்டு ப்படுத்தும்
முறைக்கு பிராணயாமம் என்று யோக ஞானிகள்
குறிப்பிடுகி றார்கள்.
அதாவது, இந்த வாசியை கட்டுப்படுத்தி
உடலின் ஆறு ஆதாரங்க ளையும் கடந்து
மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி
சக் தியை வெளிக் கொண்டு வரும் முறை யே
பிராணயாமம். குண்டலினி சக்தியை எட்டும்
போது ஒரு மனிதனுக்கு சகல வி த சித்திக
ளும் கிட்டும் என்றும் அவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில் இது மிகப்பெரிய விஞ்ஞானம்
என்பது இதனை உணர்ந்தால் புரியும்.
அதாவது ரத்தம் உடலின் நுண்ணிய உறு
ப்புகளுக்கு உணவை எடு த்து செல்கிறது.
காற்றோடு கலக்கப்பட்ட அந்த ரத்தத்தில்
மிகமிக நுண்ணிய சத்துக்கள் அடங்கி யுள்ளன.
ரத்தத்துடன் கலந்து செல்லும் காற்றானது
தூய்மையாக வும், சரியான ஓட்டத்திலும்
செல்லும்போது மனித உடலின் நுண் ணிய
உயிர்க்கோளங்கள் அனைத்தும் சரியாகவும்,
ஆரோக்கியத் துடனும் இயங்குகின்றன.
மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில்
இருக்கும் அசுத்தங்கள் களை யப்பட்டு
விடுவதால் தூயரத்தம் மிக த்தூய்மையான
உயிர் காற்றான பிராணவாயுவை சுமந்து
சென்று உடலின் நுண்ணிய உறுப்பு களுக்கு
உணவாக தருகிறது. மனிதனின் மூளை அதன்
சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே
பயன்படுத் துவதாக அறிவிய லாளர்கள் சொல்கிறார்கள்.
இது போன்ற பயிற்சிகளால் மனிதன் சித்தியை
எட்டக்கூடும் என்று ரிஷி கள் சொல்வதை
பார்த்தால், மூச்சு பயிற்சியின் மூலம் மூளை
மட்டுமல்லாமல் உடலின் அனைத்து
உறுப்புகளின் செயல்திறனையும்
வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்த முடியும்
என்கிறார்கள் தற்போதைய வாசியோக
அப்பியாசிகள்.
பத்து வாயுக்கள் :-
********************
மனித தேகத்தை பொருத்தமட்டில் பிராணன்,
அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,
கூர் மன், கிருகரன், தேவதத்தன், தன ஞ்செயன்
என்று தசவாயுக்களா கிய பத்துவாயுக்கள்
உள்ளன. இவ ற் றை விளக்கப்படுத்தி
பார்த்தால், பிராணன் எனப்படுவது உடலுக்கு
ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த
ஓட்டத்தையும், சுவாசத்தை யும்
பலப்படுத்துகின்றது. அபானன் எனப்படுவது
மலத்தில் தங்கும் மலக்காற்று, இது கீழ்நோக்கி
பாய் வது. வியானன் எனப்படுவது மண்
ணீரலில் இருந்து நரம்புகளையும்,
மூளையையும் பலப்படுத் துவது. இதனை
தொழிற்காற்று என்றும் கூறுவர். உதானன்
எனப்படுவது குரல், பேச்சை உருவாக்குகிறது.
இதனை ஒளிக்காற்று என்பர்.
சமானன் எனப்படுவது உண்ட உணவை
ஜீரணமாக்கி உட லை சமா னப்படுத்துகின்றது.
இதனை நிரவு காற்று என்பர். நாகன் எனப்படு
வது தும்மல் காற்றாக நாசியிலிருந்து
வெளிப்படுகின்றது. இதன் வே கம் எல்லா
காற்றுகளையும் விட மிகவும் அதிகமானதா
கும். கூர்மன் எனப்படுவது விழி காற்றாகும்.
விழியின் பார்வைக்கும், கண்ணீர் வரவைக்கும்
குணமும் இதற்கு உண்டு. கிருகரன் எனப்
படுவது கொட்டாவி விடு ம் காற்றாகும்,
தூக்கம் வருவதற்கான அறிகுறியையும்,
பிராண சக்தி குறைதலையும் சுட்டிக்காட்டும்
காற்றாகும்.
தேவதத்தன், இதை இமைக்காற்று என்பர்.
கண்விழியை பாதுகாக் கும் பொருட்டு
இமைத்துக் கொ ண்டேயிருக்கும். புராணங்க
ளிலில் இதை நிமி என்றும் கூறு வர்.
தனஞ்செயன்,உடலை விட் டு ஒன்பது
வாயுக்களும் வெளி யேறிய பிறகு உடலினுள்
நுண் கிருமிகளை தூண்டி உடலை வீங்க
வைத்து கடைசியில் வெ ளியேறும்
காற்றாகும். இதை வீங்கல் காற்று என்பர்.
இப்படி மனித தேகத்தில் பத்து விதமான
காற்றுகள் உயிர் வாழும் பொரு ட்டு தேகத்தை
இயக்கு கின்றன.
உயிராதார காற்று :-
**********************
பத்துக்காற்றுகளில் முதல் முக் கியமான
ஆதாரக்காற்று உயி ர்க்காற்றாகும். தாயின்
கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற
உயிர்க்காற்று தன்னை முதலில்
ஐக்கியப்படுத்திக் கொ ள்கிறது. உடல்
வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற் றிற்கு
பிரா ணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான
அந்தக் காற்றை எப்படியெல்லாம் பய ன்படுத்தி
உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி
பிராணனைக் கட்டுப்படுத்தும் பிரா ணயாமம்
கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை
என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை
என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய,
பிராணனாகிய உயிர்காற்றை சரியாக
பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம்
நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்
துபவனும், அதைப்பற்றி தெ ளிவாக அறிந்து
கொண்டு செயல்படுத் துபவனும் என்றும்
அழியாத தேகத் துடன் பாபபுண்ணியங்களுக்கு
அப்பாற் பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்ப
டிப்பட்ட ஜீவ முக்த னின் புருவநடுவில்
இறைவனாகிய தாண்டவராயன் நடரா சர்
எப்போதும் ஆனந்த திருநடனம் புரி வார்
என்கிறார்கள் ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற் சிக்கு
உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை
என்று பெ யர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த
கலையை படித்தாலும் உடல்வா ழ்வதற்கு
அவசியமான உயிர் கலையும்,
ஜீவகலையுமான பிரா ணயாமத்தை சரிவர
அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலை
யை கற்றவர்களாக, அவர் கள் எப்போதும்
இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் குருவி ற்கும் குருவாக
விளங்குபவர்கள் என்கி றார்கள்.
பிராணயமம் என்ற காற்றடக்கும் கலையா னது,
ப்ராக்ருதம், வைகி ருதம் என்ற இரு
வகைப்படும். இந்த இரண்டு மட்டுமல்லாமல்
மத் திமமான கேவலகும்பகம் என்ற ஒரு
வகையும் உண்டு. எல்லா உயிர்களும்
இயற்கையாகவே மூச்சு விடு தலுக்கு
ப்ராக்ருதம் என்று பெயர். சாஸ்திரங்களில்
கூறியபடி காற்றை கட்டுப்படுத்தி பயன
டையும் முயற்சிக்கு வைகிருதம் என்று
பெயர்.
எந்தவித முயற்சி யும் இல்லாமல்
காற்றடக்கலால் கிடைக்கும் பலன் ஒரு
ஜீவனுக்கு கிடைத்தால் அதற் கு கேவல
கும்பகம் என்று பெயர். ஆக மொத்தம் இயற்கை,
செயற்கை, கேவ லம் என்ற யதார்த்தம் ஆகிய
மூன்று நிலைகளில் காற்றடக்கும் பிராணயா
மதத்துவம் அமைகின்றது.
காற்று எண்ணிக்கை :-
************************
காற்றை உடலுள்ளிழுத்து வெளியே
விடுவதை சுவாசம் என்கி றோம்.
இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21,600
முறை நடக் கின்றது. இச்சுவாசத்தில்
இயல்பாக உடலு க்குள் செயல்பாட்டிற்கு
செல்லும் சுவாசம் அதிகபட்சம் 14,400 தான்.
மீதமுள்ள சுவா சங்கள் யாவும் வீணாகவே
கழிகின்றன. சுவாசங்கள் வீணாவதால்
ஆயுள்நிலையும் வீணாக கழிகின்றது.
நோய்களும் உண் டாகிறது.
இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி
மேம்படுத்தினால் சுவாசம் தங்குதடையின்றி
எல்லா பகுதிகளுக்கும் சென்று பிராண சக்தியி
னால் தேகத்தை வலுப்படுத்துகின்றது.
ஆயுளும் நீடிக்கிறது. நோய் அகலுகின்றது.
பாபம் விலகுகின்றது. மூச்சை சரியாக
இழுத்து விடு தலும் ஒரு வகையான பாப சம்
ஹாரமே, புண்ணியத்தை எய்துகி ன்ற
முயற்சியே என்கிறார்கள் சாதுக்கள்.
சுவாசத்தை இழுத்து விடும் கால அளவை
மாத்திரை என்பார்கள். மாத்திரை என்பது விரல்
சொடு க்கும் நேரமும், கண்ணை சிமிட் டும்
நேரமும் ஆகும். சுவாசம் இழுக்கப்படும்
போது 16 மாத்தி ரை காலம் இழுக்க
வேண்டும். சு வாசம் இழுக்கப்படும்
தத்துவத்தி ற்கு பூரகம் என்று பெயர். சுவாச
த்தை உடல் பூரிப்பதால் அச்செய லுக்கு
பூரகம் என்று பெயர் வந்தது. பயிற்சியின்
துவக்க காலத்தில் 16 மாத்திரை காலம்
சுவாசத்தை இழுப்பது கடினம். தகுந்த குரு
வின் பயிற்சி யால் சுவாசத்தை இது போல்
இழுக்கலாம்.
காற்றை இழுத்தல், அடக்கல், விடுதல் :-
*****************************************************
தொடக்க காலத்தில் காற்றை இழுத்து அடக்கி
செய்யும் பயிற்சிக ளை குருவின்
துணையில்லாமல் செய்தல் கூடாது. காற்றை
உடலு க்குள் அடக்கி பயில்வது பிரச்சினை
களை உண்டாக்கும். போதிய பயிற் சிக்கு பின்
இத்தகைய அடக்கல் பயிற் சியை செய்யலாம்.
பொதுவாக, இப்படி மூச்சை அடக்கி பயிலும்
போது சேமிக் கப்படும் பிராணனால், உடலின்
மூலை முடுக்கெல்லாம் பிராணன் ரத்த ஓட்
டங்களில் கலந்து ரத்தத்தில் உள்ள
அசுத்தங்களை அகற்றும்.
இயல்பாக சாதாரண மானுட நிலையில் 64
மாத்திரை காலம் பிராணனை உடலில் தக்க
வைக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே
முடியும். பிராணனை சேமிக்கும் செயலுக்கு
கும்பகம் என்று பெயர். கும்பகம் என்பதற்கு
அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலசம் என்று
பொருள். உண்மையில் பிராணன் அமிர்தமே.
அந்த அமிர்தமாகிய பிராணசக்தி இல் லா
விட்டால் உடல் நிலைக்காது.
16 மாத்திரை காலம் பிராணனை இழு த்து 64
மாத்திரை காலம் அதை உடலினுள் வைத்து 32
மாத்திரை காலம் தக்க வைத்த பிரா ணனை
வெளியிட வேண்டும் என்பது பொதுவிதி.
இதுவும் சற்று கடுமையே. தொடக்கத்தில்
பயிற்சியின் போது மூச்சு திணறலும், பயமும்
வரலாம். நாளடைவில் பயிற் சியினால்
சரியாகிவிடும். உடலில் பிராணனை தக்க
வைத்து பின்பு வெளியிடும் செயலுக்கு
இரேசகம் என்று பெயர். இரே சகம் என் றால்
வெற்றிட மாக்குதல் என்று பொருள்.
பிராணன் என்ற அமிர்தம் :-
******************************
அமிர்தமான பிராணன் ரத்த ஓட்டத்தில் கலந்து
தன்னு டைய பணி களை செய்து
மாசுக்களோடு வெளியாகிறது. அதாவது நாம்
வெளி விடும் மூச் சில் கரியமில வாயு
இருக்கிறது என்பார்கள். இது தான் அந்த நச்சு.
அதாவது உடலில் இருக்கும் கழிவுகள்
எல்லாம் இந்த மூச்சுக் காற் றின் வழியாக
கரியமில வாயுவாக வெளியேறுகிறது.
மிகச்சரியான பிராணயாம பயிற்சி முறை
களால் உடலில் துளிய ளவு கூட நச்சுக்கள்
இன்றி ஆரோக் கியமான நிலையில் வைத்து க்
கொள்ள முடியும். உடல் முழுவதும்
அமிர்தமாகிய தூ ய காற்றை நிரப்பி உடலை
சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள
முடி யும்.
சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி :-
********************************
ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18
முறையென ஒரு நாளை க்கு 25,920
சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது
இயற்கையிலா ன சுவாசம் என்றாலும்,
சுவாசத்தை பல ப்படுத்த வைகிருதம் என்ற
சுவாசப் பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த
வே ண்டும். வைகிரு தம் என்ற சுவாசப் பயி
ற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த
பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யம
பிராணயாமம், ஆத் யபிராண யாமம், மகத்யோக
பிராணயாமம் என்று பல வகையாக
பிரிக்கலாம்.
ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப் படை
என்பது நாடி சுத்தி என்றழைக் கப்படும்
சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது,
இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை
உள்ளிலுத்து பின்பு காற்றை அடக் காமல்
வலப்புற நாசி யின் வழியே காற்றை
வெளியேற்ற வேண்டு ம். அதன்பின்பு வலப்
புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்
றை அடக்காமல் இடப் புற நாசி வழியே
காற்றை வெளியிட வேண் டும். இவ்வாறாக
மாறி மாறி செய்வதால் சுவாசம்
சுத்தமடையும்.
இச்செயலின் காலத்தில் அதிக மாக
கோபப்படுதல், வேகமடைதல் போன்ற
உணர்ச்சிகளு க்கு ஆளாக கூடாது. நிதானமும்,
அமைதியும் வேண்டும். காலை வேளையே
இந்த பயிற்சிக்கு சரியான தாகும். குளிர்ந்த
நீரைப் பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சி
யை மேற்கொள்ள வேண் டும். இந்த
பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை,
உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று
நேரங் களிலும் இந்த பயிற்சியை நிதானமாக
செய்ய வேண்டும். இப்ப டியே தொடர்ந்து ஒரு
மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம்.
காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள்
கலந்திருக்கின்றன. இவை நாம் சுவா சிக்கும்
போது சுவாசத்தின் வழியாக உட லுக்குள்
சென்று உடலை நோய் வாய்ப் படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம்
என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த
விஷத்தை முறி யடிக்க வாசுகி என்னும்
வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்
கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள்
எல்லாம் முறிக்கப் பட்டு உடலுக்குள் தூய
பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூய
காற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும்
பரிசுத்த தன்மை யுடன் விளங்குவன வாக
அமைகின்றன என்கிறார்கள்.
" மூலாதாரம்
கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே"