காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் ?

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் ? உங்களை நோக்கி ஓடி வரும் ஆபத்து – கண்டிப்பாக படியுங்க !!

இன்றைய கால்கட்டத்தில் பிரேக்பாஸ்ட் எனப்படும் காலை உணவுகள் காபி, டீ, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ரொட்டி, கம்பெனி உணவுகள் என இருக்கிறது. இவை எல்லாமே அமிலம், வாயு, பசைத்தன்மை நிறைந்தவை. காலை டிபன் சாப்பிட்டவர்கள் அனைவரும் மந்தமாகி விடுகின்றனர். இதைப் போக்கத்தான் காபி, டீ, புகையிலை, பாக்கு போன்ற தூண்டி விடும் பொருட்கள் தேவைப்படுகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம் .காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
காலை உணவு அவசியமில்லை என்போர் சார்பில் வெளியான ரிப்போர்ட்டில்,”கோதுமையில் ரப்பர் தன்மையும், பசைத் தன்மையும், ஒருவித விஷவாயுவும் இருப்பதால் பல வலிகளுக்கு காரணமாக இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் கோதுமை உணவை மக்கள் தவிர்க்கிறார்கள். இது குளுடன் லிஸ்டில் வருகிறது. கோதுமையில் உடல் எடை குறையும் என்பதும் சர்க்கரை நோய் குணமாகும் என்பதும் தவறு.
காலை உணவு திரவ உணவாகத்தான் இருக்க வேண்டும். முதலில் தண்ணீரை தாராளமாகக் குடித்து குடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து பழச்சாறுகளையும், பழங்களையும் சாப்பிடலாம். சீரகம், கொத்தமல்லி, சுக்கு போன்றவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காபி போல தயாரித்து சாப்பிடலாம்.இயற்கை மருத்துவ முறைப்படி, பூசணி சாறு, அருகம்புல் சாறு, இளநீர் போன்றவற்றை சாப்பிடலாம். இவை அமிலத்தை குறைத்து ஆல்கலைன் தன்மையை உண்டாக்கும்.காலை உணவு சிறுதானிய கஞ்சியாக இருக்கலாம். அதில் தேங்காய் துருவல் மட்டும் சேர்த்தால் போதும். தேங்காயில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. இது தாய்ப்பாலுக்கு சமமானது.காலை உணவு அவசியமில்லை என்பது இயற்கையின் விதி. பசியும், செரிமான சக்தியும் சூரியனின் சக்தியைப் பொருத்தது. சூரியன் உச்சிக்கு வரும்போதுதான் செரிமான சக்தி சரியாக இருக்கும்.
காலையில் எழுந்தது முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு உடம்பு சுத்தப்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்யும். அதற்கு வாய்ப்பு தர வேண்டும். சுத்தப்படுத்துவதற்கு உதவி செய்யும் நீர் ஆகாரங்களைத்தான் சாப்பிட வேண்டும்.திரவ உணவு என்று சொல்லி பால் பொருள்கள் சாப்பிடக் கூடாது. இது மிருக உணவு. பல நோய்களுக்கு காரணம். அமிலமும் விஷவாயுவும் தான் உண்டாகும்.
நமது முன்னோர்கள் கிராமங்களில் காலை உணவாக சிறிதளவு மாவுப் பொருளும் (சோறு, கூழ், கஞ்சி) அத்துடன் நிறைய தண்ணீரும் சேர்த்து குடித்து விட்டு மண்ணில் காற்றில் வெய்யிலில் உழைப்பில் ஈடுபட்டார்கள். அப்போது நிறைய தண்ணீர் குடிப்பார்கள். உடம்பு தூய்மையான பின்புதான் மதியம் முக்கிய உணவு உண்பார்கள். இரவு உணவும் நேரத்தில் சாப்பிட்டு விடுவார்கள்.
காலை உணவு மறுப்போர் சங்கம் பற்றி காந்திஜி தனது சுய சரிதை நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். காலை உணவை நிறுத்திய பின்பு அவரது தலைவலி போய் விட்டதாம்.பிரேக் பாஸ்ட் என்றால் என்ன? விரதத்தை முறிப்பது அல்லது முடிப்பதுதானே. பழச்சாறுகளில் தானே விரதத்தை முடிக்க வேண்டும். மக்கள் விரதமே இருக்கவில்லையே. இக்காலத்தில் இரவில், தாமதமாக பலவிதமாக அதிக உணவுகளை உண்கிறார்கள். இதுவே செரிமானமாகாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் காலையில் புளித்த மாவுப் பண்டங்களை நிரப்பினால் எல்லா நோய்களும் வரும்.
இயற்கை மருத்துவத்தில் சர்க்கரை நோய், புற்றுநோய் உள்பட அனைத்தையும் குணமாக்க முடிகிறது. எப்படி?காலையில் சாப்பிடாமல் இருந்து பசியை உண்டாக்கி வளர்த்து வைத்தால்தான் திருக்குறள் கூறியபடி மாறுபாடு இல்லாத உணவை, அளவறிந்து, முறையறிந்து உண்டு நோய் வராமல் வாழலாம்.இன்றைய காலை உணவுப் பழக்க வழக்கமும் நாகரிகமும் தவறாகவே இருக்கிறது. பழக்கத்தினாலும், வழக்கத்தினாலும், சமுதாய நெருக்கடியினாலும்தான் பலர் காலை உணவை கண்டபடி சாப்பிடுகிறார்கள்.
அறிவுத் தெளிவும், நாவடக்கமும் இல்லாதவர்கள் சுவையாக தயாரித்து அதிகம் உண்டு விடுகிறார்கள். பள்ளி செல்லும் பல குழந்தைகள் பசியின்மை காரணமாக காலை உணவை மறுக்கின்றன. கட்டாயப்படுத்தி திணிப்பதால்தான் சளி, காய்ச்சல், மலச்சிக்கல் முதலியன வருகின்றன.
காலை நேரம், வேலை நேரம். வேலை நேரத்தில் நீர்தான் சிறந்த உணவு என்று வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.காலையில் சாப்பிடாத குழந்தைகள் மூளை தெளிவாக இருந்து நன்கு படிக்கிறார்கள். உண்டவர்கள் உறங்கி விடுகிறார்கள். கண்கள் விழித்து இருந்தாலும் மூளையும் உடம்பும் பாதி உறக்க நிலையில் இருக்கும்.என்ன சாப்பிடுவது என்பதை அவரவர் தான் முடிவு எடுக்க வேண்டும். தவறான கருத்துகள் மூலம் வழிகாட்டி சிக்கலை உண்டாக்கக்கூடாது. மக்களும் பிறர் கூறுவதையெல்லாம் அப்படியே நம்பிவிடக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்கள்
அதே சமயம் காலை உணவுதான் முக்கியம் என்போர் தரப்பில் வெளியான செய்த்கிக் குறிப்பில்,”அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
‘காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.
காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். ‘சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்’ என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன் காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.எல்லாம் அடங்கிய பால் ‘மில்க் ஈஸ் எ கம்ப்ளீட் ஃபுட்’ என பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தை பால் குடிப்பதற்கு தயங்கும். ஆகையால் முற்றிலும் பால் குடிக்காவிட்டால் வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்படும். நோய்களை உருவாக்கும். இதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
ஐஸ்க்ரீம் பிடிக்காத குழந்தைகள் இல்லை எனலாம். ஆகவே பாலில் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையான பவுடரை சேர்த்து புட்டிங் தயாரித்து கொடுக்கலாம். சில நாட்கள் பால் பாயசம் தயாரித்து கொடுங்கள். பாலுடன் ஆப்பிள் அல்லது இதர பழவகைகளை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொடுங்கள்.
பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.
காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும் என்றும் சொல்கிறார்க்ள்