உள் மூலம் குணமாக

உள் மூலம் குணமாக..!!!

சின்ன வெங்காயம் ... இருபத்தி ஐந்து கிராம் நறுக்கியது
மிளகு . ஐந்து கிராம்
பனை வெல்லம் .. இருபது கிராம்
செக்கு நல்லெண்ணெய் .......... நூறு மில்லி
நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகுத் தூளை போட்டு வேக விட்டு பின் பனை வெல்லம் சேர்த்துக் கிளறி அனைத்துப் பொருட்களும் வெந்து வந்தபின் இறக்கி வடி கட்டி ஆறவைத்துக் கிடைக்கும் தைலத்தைப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து பத்து மில்லி தைலத்தை உள்ளுக்குக் குடித்து வர வர படிப் படியாக உள் மூலம் குணமாகும்
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

#மூலம் குணமாக !!!

மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும் அசைவம் போதைப் பொருட்களை தவிர்த்தல் அஜீரணம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் அடிக்கடி உணவில் கீரைகள் சேர்த்தல் கருணைக் கிழங்கு எளிதில் செரிமானம் ஆகும் உணவுகள் சாப்பிடுதல் உடல் உஷ்ணம் அடையாமல் பார்த்துக் கொள்ளுதல் ஆகியவை நோய் வராமல் தடுக்கும்
கருணைக் கிழங்கு (சேனைக் கிழங்கு )...ஐம்பது கிராம் எடுத்து மேல் தோல் நீக்கி சிறி சிறு துனுகளாக நறுக்கி எடுத்து
நூறு மில்லி நாட்டுப் பசு நெய்யைக் காய்ச்சி காய்ந்து கொண்டிருக்கும் நாட்டுப் பசு நெய்யில் நறுக்கி வைத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தைலப் பதத்தில் வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
இந்த நெய்யில் பத்து மில்லி தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்து வர மூல நோய் படிப் படியாகக் குணமாகும்

#நவ மூலங்களும் குணமாக..!!!

மூல நோய் உள்ளவர்களுக்கு உடல் உஷ்ணம் அஜீரணம் செரியாமை புளி ஏப்பம் நெஞ்செரிச்சல் மல சிக்கல் ஆகிய குறிகள் இருக்கும்
உணவுக்குப் பின் அரை மனி நேரம் கழித்து இளநீர் குடித்தல் வாரம் ஒரும் முறையாவது கருணைக் கிழங்கை உணவில் சேர்த்தல் எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ணுதல் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் ஆகியவை நோய் வராமல் தடுக்கும்
நோய் வந்த பின் குணப் படுத்த தேவையான மருந்து
திரிகடுகு சூரணம் .. முப்பது கிராம்
காட்டுக் கருணைக் கிழங்கு ..... நூறு கிராம்
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை கொதிக்க வைத்து இறக்கி மிதமான சூட்டில் பத்து கிராம் அளவுக்கு அரைத்து வைத்துள்ள தூளைப் போட்டு கலக்கி குடித்து வர பல்வேறு வகையான மூல நோய்களும் குணமாகும் மலச் சிக்கலும் சரியாகும்
நோயின் தீவிரத்திற்கு ஏற்றாற்போல் பாலில் சேர்க்கும் சூரணத்தின் அளவை கூட்டியோ குறித்தோ பயன் படுத்திக் கொள்ளலாம்
மருந்து உண்ணும் காலம் வரை இச்சா பத்தியம் ( தாம்பத்திய உறவு எனப்படும் உடல் உறவைத் தவிர்த்தல் ) இருந்தால் மட்டுமே இந்த மருந்து வேலை அசெய்யும்
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

#மூல பவுத்திரம் நோய் குணமாக

மருந்து ஒன்று
திப்பிலி ........... ஐந்து கிராம்
வால் மிளகு ........... ஐந்து கிராம்
கருஞ்சீரகம் ........... ஐந்து கிராம்
பெருங்காயத்தூள் ........... ஐந்து கிராம்
இந்துப்பு .......... பதினைந்து கிராம்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கி வைத்துக் கொளவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பொடியில் இரண்டு கிராம் தூளை தேவையான அளவு நாட்டுப் பசு நெய்யில் குழைத்து உண்டு வர படிப் படியாக பவுத்திர நோய் குணமாகும்
மருந்து .. இரண்டு
வெங்காயம் . ..... இருபது கிராம்
விஜயன் கடுக்காய் . ..... இருபது கிராம்
சீரகம் .. . ..... இருபது கிராம்
கோரைக் கிழங்கு . ..... இருபது கிராம்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
வைத்துக் கொளவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள பொடியில் இரண்டு கிராம் தூளை தேவையான அளவு நாட்டுப் பசு நெய்யில் குழைத்து உண்டு வர படிப் படியாக பவுத்திர நோய் குணமாகும்
மருந்து மூன்று
தினமும் இரவு ஒரு வாழைப் பழத்தை அரைத் தேக்கரண்டி விளக்கெண்ணையில் தோய்த்து சாப்பிட்டு வர நோய் கட்டுப் படும்
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்