திருமணத்தின் போது ஏன் கட்டாயமாக மருதாணி வைக்கிறார்கள்?

திருமணத்தின் போது ஏன் கட்டாயமாக மருதாணி வைக்கிறார்கள்?

மருதாணி ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை


திருமணத்தின் போது நடத்தப்படும் முக்கியமான சடங்குகளில் மருதாணி வைக்கும் முறை நம்மிடம் இருக்கிறது. அதுவே வட இந்தியாவில் இதற்கென தனியாக நடத்தப்படும் பிரபலமான ஒரு விழா ஒன்று உண்டு.

அந்த மருதாணி திருவிழாவில் அப்படியென்ன நடக்கும்?... அதனுடைய சிறப்பும்
ரகசியமும் தான் என்ன?...


மருதாணி வைக்கும் மணமகளின் கையில் எவ்வளவு அதிகமாக சிவக்கிறதோ, அது அவளின் வருங்கால கணவர் மீதுள்ள அன்பைக் குறிக்கிறது என்று நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது செயற்கையாக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட  மெஹந்திகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் மருதாணியின் நிறத்தை வைத்து அன்பை எடைபோட்டால் ஆண்கள் ஏமாந்து போக நேரிடலாம்.

அதுவே மணமகளின் கையில் மருதாணி நீண்ட நாட்கள் அழியாமல் இருந்தால், அது அவளது மாமியார் அவளை பாராட்டுவார் என்பதைக் குறிக்கிறது.

மணமகளின் கையில் உள்ள மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களின் அடையாளமாக வரையப்படுகிறது.

அதாவது, மலர்கள், மொட்டுகள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், மணமகன் மற்றும் மணமகள் போன்ற மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே பொதுவானவை.

மணமகளின் உள்ளங்கையின் பின்புறம் போடும் வடிவமைப்பு அவளது வாழ்க்கையின் கவசம் மற்றும் பாதுகாப்பையும், உள்ளங்கையில் போடுவது பிரசாதத்தையும், மலர்கள், சந்தோஷம் மற்றும் இதயத்தின் அறிகுறியையும், மொட்டுகள் வாழ்க்கையின் புதிய ஆரம்பத்தையும் குறிக்கிறது.

திருமணத்தின் போது மருதாணி போடுவது ஏன்?

மருதாணி ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால், இது அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற ஒருவித பயமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே இதனால் திருமணத்தின் போது மணமகளின் கையில் மருதாணி போடுவதால், அவளுக்கு திருமணத்தினால் ஏற்படும் பதட்டத்தை குறைத்து, உடல் மற்றும் நரம்பின் நுனிகளை குளிர்விக்க உதவுகிறது.



அதுவே மணமகனுக்கு போடுவது, அந்த மருதாணியின் நறுமணம் பாலியல் உணர்வை தூண்டும் என்பதால், திருமணத்தின் போது, அவர்களின் வாழ்க்கையை இனிதே தொடங்குவதற்கு பயன்படும் வகையில் மணமகனுக்கு மருதாணி போடுவார்கள்.