பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை

பாரம்பரிய சத்தான சத்து மாவு தயாரிக்கும் முறை



இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..
இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

1.ராகி
2.சோளம்
3.நாட்டு கம்பு
4.பாசிப்பயறு
5.கொள்ளு
6.மக்காசோளம்
7.பொட்டுக்கடலை
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.தினை
11.வரகு
12.சாமை
13.கொண்டை கடலை
14.கருப்பு உளுந்து
15.சம்பா கோதுமை
16.பார்லி
17.நிலக்கடலை
18.மாப்பிள்ளை சம்பா
19.அவல்
20.ஜவ்வரிசி
21.வெள்ளை எள்
22.கசகசா
23.ஏலம்
24.முந்திரி
25.சாரப்பருப்பு
26.பாதாம்
27.ஓமம்
28.சுக்கு
29.பிஸ்தா
30.ஜாதிக்காய்
31.மாசிக்காய்

*31 வகையான தானியங்களை முளை கட்டி அரைத்த தரமான சத்துமாவு கிடைக்கும்*

செய்முறை

1. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

2.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

3.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

4.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

7.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

8.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

9.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

குறிப்பு :

1. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

2.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

*பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்*