கழுத்து பளபளக்க..!

கழுத்து பளபளக்க..!

கழுத்தை தினமும் ஸ்க்ரப் செய்தாலே, பளிச் என்றிருக்கும். சப்போட்டா, தர்பூசணி, நாவல் என ஏதாவது ஒரு பழத்தின் கொட்டையைக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும். இதுதான் சருமத்துக்கான இயற்கை ஸ்க்ரப். இந்த ஸ்க்ரப் பொடியுடன் ஏதாவது பழத்தின் சதைப் பகுதி சிறிதளவு சேர்த்துக் குழைத்து, கழுத்தில் தடவி, விரல்களால் சிறுசிறு வட்டங்கள் போல ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உலரவிட்டுக் கழுவவும். அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி பளிச் என்று ஆகும்.

இதே ஸ்க்ரப் பொடியை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதுவும் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, கழுத்தை மிருதுவாக்கும்.

இன்னும் எளிய வழி, கழுத்தை தண்ணீரால் நனைத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கழுத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இறந்த செல்களை நீக்கும்; கழுத்தின் கருமையும் நாள்பட மறையும்.