தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொடுக்கும் உணவுகள்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கொடுக்கும் உணவுகள்....!!!
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
வெந்தயம்-
வெந்தயத்தை இரவில் தண்ணீர் அல்லது தயிர் அவர்களை ஊற வைத்து, அதை வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும்.

சதகுப்பி:
இது பால் சப்ளை தூண்ட உதவும். சதகுப்பி பொதுவான தென்னிந்திய உணவு அல்ல. எனினும் இது புதினா போன்ற தனிப்பட்ட சுவை.

தண்ணீர்:
தண்ணீர் என்ற முக்கியமான தனிமத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது. ஆனால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்திலும் கூட தண்ணீர் அதன் முக்கியத்துவத்தை இழப்பதில்லை. பால் வரத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் தண்ணீரை பருக வேண்டும். அதனால் உங்களுக்கு தேவையான அளவில் தண்ணீரை நிரப்பி பாட்டில்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக தாயான பெண்களுக்கான தாய்ப்பால் கொடுக்கும் டிப்ஸ்களில் இதுவும் ஒன்று.

வெள்ளைப்பூண்டு
பிரசவித்த பெண்களுக்கு நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு, வெல்லம் வாங்கித் தருவது தமிழர் மரபாகும். இது இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. நல்லெண்ணையானது தளர்வடைந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவுகிறது. பச்சை உடம்பு என்று அழைக்கப்படும் பிரசவித்த தாய்மார்களின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் சக்தி எள் எண்ணெக்கு அதிகம் உண்டு. எனவேதான் நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொடுக்கின்றனர். மிதமான காரம் சேர்த்த, மிளகு, கொடாம்புளி சேர்த்த உணவுகளையே கொடுக்கலாம். பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது.அது தாய், சேய் நலனுக்கு ஏற்றது. அதேபோல் வெள்ளைப் பூண்டை வதக்கி உட்கொள்வது தேவையற்ற வாயு உடலில் சேராமல் தடுக்கும், தாய்பால் சுரக்கும். இதனால் தாய்பால் மூலம் குழந்தைகளுக்குச் வயிற்றுக்குச் செல்லும் சத்தானது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்.

பசும் பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். .கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மிளகு ரசம், சுரைக்காய் கூட்டு
காரமாய் சாப்பிட்டால் பிரசவித்த வயிறுக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து பத்திய உணவு தயாரித்து கொடுப்பார்கள். அது அற்புத சுவையோடு தாய்க்கும், சேய்க்கும் ஏற்ற உணவாகும். மிளகும், கொடாம்புளியும் சேர்த்த ரசம், சுரைக்காய் கூட்டு சேர்த்து உண்பது தாய்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். அதேபோல் மீன், கருவாடு போன்றவைகளை காரம் குறைவாக வைத்து சமைத்துக் கொடுப்பார்கள். இது தாய்ப் பாலை அதிகம் சுரக்கச் செய்யும்.

மூலிகை கசாயம்
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும். அதேபோல் தக்காளி இலைகளை ,காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும்.

தயிர்
பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் தயிரும் ஒன்று. இதனால் பிரசவத்தின் போது இழந்த கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்களை பெறலாம்.
வாழைப்பழம்
உடலுக்கு அளவில்லாத சக்தியை கொடுக்கும் உணவுப் பொருள் என்றால் அது வாழைப்பழம் தான். இத்தகைய வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்து உள்ளது. மலைப்பழம், கற்பூர ரஸ்தாளி போன்றவை சாப்பிடலாம். மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவையும் சாப்பிடலாம்.

உலர் பழங்கள்
ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் ஒரு கையளவு முந்திரி, உலர் திராட்சை, வால்நட் அல்லது பாதாம் போன்றவற்றை சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, பாதாமை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து, தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

உளுந்து பொடி
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

பசலைக் கீரை
கீரைகளில் பசலை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் கே, ஏ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனையும் மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸை, பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், அவை எளிதில் செரிமானமடைந்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.
பால்
டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் முக்கியமான ஒன்று பால். இந்த பாலில் உடலுக்கு வேண்டிய அளவில் புரோட்டீன் மற்றம் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் இரண்டு டம்ளர் பால் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.
முட்டை
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு முட்டை மிகவும் அவசியமான ஒரு உணவுப் பொருள். இந்த உணவுப் பொருளை பெண்கள் சாப்பிட்டால், பலம் கிடைப்பதோடு, குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளும் அளவில் சக்தியும் கிடைக்கும்.

முருங்கைக் கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். அதேபோல் கல்யாண முருங்கை இலையும் பாசி பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.

முருங்கைக்காய்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய உணவுகளில் முருங்கைக்காய் மிகவும் பிரபலமானது. ஆகவே நன்கு வலுவோடு இருப்பதற்கு, இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வர வேண்டும்.

பீட்ரூட்
உடலில் இரத்தத்தை அதிகரிப்பதில் ஒரு சிறப்பான உணவுப் பொருள் தான் பீட்ரூட். எனவே பிரசவத்தின் போது இழந்த இரத்தத்தை மீண்டும் பெறுவதற்கு, பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்து
பிரசவ நேரத்தில் அதிக அளவு ரத்தப்போக்கினால் பெண்களின் உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும். தாய்மார்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எடை குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புசத்து நிறைந்த உணவை அளிக்கவேண்டும். ஏனெனில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அதிகமான உணவு உட்கொள்ளவும். முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். பால், மாமிசம், முட்டை உட்கொள்ளவும். அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் 'சி" அதிகமுள்ள பெருநெல்லி,சு கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து தாயின் மூலம் தாய்பால் வழியாக குழந்தைக்குப் போய் சேரும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓம வாட்டர்
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
இஞ்சி
இஞ்சி சேர்த்துச் சட்னி, துவையல், பச்சடி போன்ற முறையில் சாப்பிடலாம்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. எனவே பிரசவத்திற்கு பின், அனைத்து பெண்களும் இந்த உணவுப் பொருளை உணவில் சேர்த்தால், பழைய உடல் நிலையை எளிதில் பெற முடியும்.

பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

கொய்யாப் பழம்
பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் கொய்யாப் பழமும் ஒன்று. இந்த பழத்தில் ஆப்பிளைப் போன்றே அதிகப்படியான அளவில் இரும்பச்சத்தானது நிறைந்துள்ளது. மேலும் இது எளிதில் மார்கெட்டில் கிடைக்கக்கூடியது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலில் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடும் போது, இதில் உள்ள சத்துக்களானது உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் போது, தாயின் உடலில் இருந்து வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்டுவதற்கு, நெல்லிக்காய் ஒரு சிறந்த உணவுப் பொருள்.
பாகற்காய்
புது அம்மாக்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்ததாக பாகற்காய் கருதப்படுகிறது. இந்த பாகற்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடலில் இரத்த குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டால், இரத்த ஓட்டத்தை சீராக அதிகரிக்கலாம்.

அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.

புரதச்சத்து அவசியம் புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகள், மாமிச உணவுகள், பால் பொருட்கள், பீன்ஸ் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாய்மார்களின் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். தாய்பால் தரும் பெண்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்.
மூடப்பழக்கம் தேவையில்லை
பிறந்த குழந்தைக்கும், பிரசவித்த தாய்க்கும் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இதுவே சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்திற்கு ஒத்துவராத மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும். 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை சேர்த்து பால் கொடுக்கும் பொழுதும் தொடரவும்.போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது. பச்சைக் காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது. எனவே மறக்காமல் அவற்றை வாங்கி உட்கொள்ளலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.