வசம்பு

வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடுவதன் சிறப்பு என்ன?


பொதுவாகவே தமிழ் சமூகத்தில்,தாய்மார் தம்முடைய குழந்தைகளுக்கு திருஸ்டி பொட்டு இடுவது வழக்கு.அதுவும்,வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து,இடுவது வழக்கம்.இதற்கான அறிவியல் விளக்கம் காண்போம்.

வசம்புக்கு பிள்ளைமருந்து என்ற வேறு பெயரும் உள்ளது.இது குறிப்பாக குழந்தைக்கு உண்டாகும் நோய்களுக்கு நல்லது மட்டுமல்லாது,குழந்தைகளின் நோய் எதிர்புசக்தியை அதிக்ரிக்க செய்கிறது.

மேலும், நரம்புசெல்களை செயல்படுத்தி,குழந்தையின் மூளையின் செயல் பாட்டை அதிகரிக்கும்.பேச்சு துவக்கத்திற்கு முக்கிய பங்கினையுமும் வகிக்கிறது.திக்குவாய் நோய்க்கு சிறப்பாக மருத்துவமாக கூறப்படுகிறது..

எனவேதான், வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடப்படுகிறது.