சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள்

சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள்

பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வயதுக்குள்ளே கிரகிக்கப்படுவதாக புதிய உலகம் அறிந்திருக்கிறது.
எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்? எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை பார்ப்போம்.

1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.

2. பகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.

3. பயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.

4. பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.

5. பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

6. பாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.

7. புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.

8. சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.

9. பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.

10. உற்சாகப்படுத்தப்படும் சூழல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது.

11. முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.

12. பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.

13. நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.

14. பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.

"வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு' இது போன்ற பழமொழிகள் உருவாகக் காரணமே நல்ல பெற்றோருக்குப் பிறந்தும் தகாத சூழ்நிலை அமைந்து விடுவதுதான். நம் முன்னோர்கள் வேண்டுமானால் சூழ்நிலையின் சூட்சுமத்தை கருதாதிருக்கலாம். காலம் மாறி வரும் வேளையில் நம் வாரிசுகளுக்கும் நம் நாட்டின் வாரிசுகளுக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம். அவர்கள் நாட்டிற்கு சுபநிலையை உருவாக்கித் தருவார்கள்.