மூட்டு வலி எனும் நோயும்

மூட்டுவலி..!!!

மூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும் நடுத்தர வயதினரிடமும், வநோதிகரிடமும் காணப்படுகிறது. இதற்குக் காரணம், மூட்டுக்களில் உள்ள ஜவ்வு தேய்ந்துவிட்டது. உடற்பருமன் நிமித்தம் உடல் பாரம் தாங்காது மூட்டுவலி வந்துள்ளது என மருத்துவ உலகம் கூறுகின்றது.
ஆனால், இயற்கை உலகம், மருத்துவ உலகம் கூறும் காரணம் சரியல்ல. மூட்டுவலிக்கும் மெய்யான காரணம், மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருவதேயாகும். மற்றொரு காரணம் மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் காலால் நடப்பது குறைந்து வருவதேயாகும். பெரும்பாலும், இருசக்கர வாகனம், அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் தான் பெரும்பாலும் செல்கிறோம். காலால் நடப்பது இல்லையென்றே கூறலாம்.
எனவே, மூட்டு வலிக்கான மூல காரணங்களை அறிந்து நமக்கு நாமே சரி செய்து கொள்வது தான் இயற்கை வழியாகும். இதைத் தவிர்த்து, அறியாமையின் நிமித்தம் உலகில் எந்த மருத்துவத்தை நாடினாலும் மூட்டு வலியை நிரந்தரமாக நிறுத்த இயலாது. புலம்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் மருத்துவச் செலவிற்காக பண விரையமும் கால விரையமும் செய்து கொண்டிருக்கிறோம். தவிரவும் மூட்டு வலிக்காக மருத்துவர்கள் கூறும் மருந்துகள் பயன்படுத்தி, பக்க விளைவின் நிமித்தம் பற்பல நோய்களைப் புதிது புதிதாக வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம்.
இவையெல்லாம் தேவையே இல்லை. உரிய காரணமான தவறான உணவுப் பழக்கத்திலிருந்து சரியான உணவுப் பழக்கத்திற்கு மாறுவதே முதல் இயற்கை வழியாகும். இதற்காக எந்த மருத்துவரிடமோ, அல்லது சத்துணவு வல்லுநரிடமோ செல்லவும் வேண்டாம். சிறிது இயற்கையைப் பற்றி ஆழமாக சிந்தித்து, இயற்கையின் அற்புதங்களை அறிந்து, நம்மை நாமே சரி செய்து கொண்டால், நமக்கு மருத்துவமே அவசியமில்லை. கால விரையத்தினையும் பண விரையத்தினையும், பக்க விளைவுகளையும் எளிதில் தவிர்த்து, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தை எளிதில் ஈட்டிவிடலாம். பற்பல பக்க விளைவுகளால் ஏற்படும் புதுப்புது நோய்களை நம்மிடையே தோற்றுவிப்பதையும் தவிர்த்து விடலாம். இவ்வித இயற்கை வழியைத் தான் திருவள்ளுவர், தமது திருக்குறளில் மருந்து எனும் அதிகாரத்தில் தெளிவாக அந்நாளிலேயே எடுத்துரைத்துள்ளார். நாம் தான் புரியாது, திசை மாறி திண்டாடுகிறோம். திருமூலரும், தமது திருமந்திரத்தில், ‘உடம்பினை வளர்க்கும் உபாயத்தில், ‘உண்டி சுருங்கின் உபாயம் பலவுள’ எனத் தெள்ளந்த் தெளிவாக்கியுள்ளார். பதஞ்சலியும், தமது அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம் எனச் சூட்சுமாக மனிதருக்கு மருத்துவமே வேண்டாம். மருத்துவத்தை மறந்து வாழலாம் என பின்வரும் இடர்களை அறிந்து முன் கூட்டியே வழி காட்டியுள்லார். பருத்தஹரியும், தமது சாங்கியோத்ய உபநிடத்தில் மனிதன் எதை உண்ண வேண்டும், எதை அருந்த வேண்டும் என அந்நாளிலேயே அறிவுறுத்தியுள்ளார். அதாவது,மனிதன் உண்பதற்குப் பழங்கள் போதும், அருந்துவதற்குத் தண்ணீர் போதும் என நமது உணவையும் பானத்தையும் இயற்கைத் தெய்வீகமாகக் கூறியுள்ளார்.
அதன்படி, மருத்துவர்களது கூற்றுக்களைத் தவிர்த்து இயற்கைக் கூற்றுக்கள் கூறும் இயற்கையிலிருந்து தவறாக சமைத்து உண்ணும் அனைத்து வித சமையல் உணவுகளையும் முற்றிலும் அல்லது பெரும்பாலும் தவிர்ப்போம். மாறாக, தேங்காய், பழ வகைகளை நமது உடல் உண்ண உணர்த்தும் போதெல்லாம் உணவாக உன்ணுவோம். அதாவது முதலில் தேவையான தேங்காயை உண்டவுடன், தேவையான கிடைக்கும் பழ வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக நன்கு மென்று உண்ணுவோம். நமது உடல் ஏதேனும் அருந்த உணர்த்தும் போது மட்டும், தேவையான பச்சைத் தண்ணீர் அருந்துவோம். மேலும் தேவைப்பட்டால், தேங்காய் தண்ணீர், பழச்சாறுகள் என இயற்கை பானங்கள் மட்டும் அருந்துவோம். காபி, டீ, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் அனைத்து குளிர்பானங்கள், அனைத்து சத்து பானங்களையும் அருந்துவதைத் தவிர்ப்போம். நமது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளையும் தவிர்ப்போம். நடைப்பயிற்சி, எட்டு நடைப்பயிற்சி செய்வோம். யோகாசனம் பயிற்சிகளான சுக ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம், உட்கட்டாசனம், யோக முத்ரா, மகா முத்ரா, மஜ்ரி ஆசனம், உஷ்டாசனம் போன்ற அசான பயிற்சிகளையும் மெல்ல மெல்ல சிறிது சிறிதாகப் பழகி, செய்ய முயல்வோம். உறுதியாக சில நாட்களிலேயே அல்லது பல நாட்களிலேயே எவ்வித உள் வெளி மருந்தின்றி அறுவைச் சிகிச்சையின்றி எவ்வித எவ்வளவு நாட்பட்ட மூட்டுவலியும் மறைந்து போகும்.

இயற்கை உணவு உண்டு, இயற்கையாக வாழும், தனது உணவுக்காக நடந்து நடந்து சென்று, உணவைத் தேடி வாழும் எந்த விலங்குக்காவது மூட்டு ஜவ்வு தேய்ந்து மூட்டு வலியால் முடங்கி உள்ளதா? இல்லவே இல்லை. மிக மிக உடற்பருமனான யானை, தனது இயற்கை உணவையும், பச்சைத் தண்ணீரையும் வனத்தில் நடந்து நடந்து சென்று, தேடி உண்டு வாழும், யானைக்கு மூட்டு ஜவ்வு தேய்ந்து, மூட்டு வலியால் அவதிப்படும் யானை உலகில் உள்ளதா? இல்லை அல்லவா?
எனவே, மருத்துவத்தில் ஒன்றுமே இல்லை. மருத்துவத்தை நாடினால், நமது உடலும், உயிரும் அழியும் என்பதை மனத்தில் நிலை நிறுத்த நாடுகிறேன் நமது ஒப்பற்ற மனிதர்களை!