மூல நோய் Curing simple ways

மூல நோய் Curing simple ways !!!

ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள்
வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான்
மூலநோய் என்கிறார்கள்.
மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம்
வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று
இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற
முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து
சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே
தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.
தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக்
கிழிப்பதால்
ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு
நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த
வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர்
அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.
இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம்
அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ
மூலங்கள் உண்டாகின்றன.
ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி,
இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும்
நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப்
பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ்
முன்னோர்கள்
இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
அவை:
நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று
மூலம், வரண் மூலம், ரத்த மூலம்,
வினைமூலம்,
மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம்,
சூத
மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம்,
தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம்,
சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு
மூலம்.
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை
என்பதால் இவற்றை நவமூலம் என்றும்
சொன்னார்கள்.
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை
குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை
ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதனடிப்படையில் மூலநோய்க்கு
பிரத்யேகமான மூலிகை மருந்துகள்
தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க
விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.
ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும்
உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும்
மருந்துகளும் சித்த மருத்துவத்தில்
சொல்லப்பட்டுள்ளன.
இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம்
சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும்
சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல
ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது.
மீண்டும் வருவதில்லை.
உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி
தெரிந்துகொள்ளுங்கள்.
துத்திக் கீரை என்ற ஒன்றை
கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை
தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால்
மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய
மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது
விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி
மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி
உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச்
சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட
செய்து பார்க்கலாம்.
துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப்
பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்
சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை
எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் றுத்தி யிலையை (அகத்தியர்
குணபாடம்)
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல்
கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி
நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன
உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும்
அவசரமாக உணவை சாப்பிடுவதாலும்
மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல்
இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை
நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன்
பாசிப்பருப்பு
சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது
நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல்
தீரும்.
மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம்
சேர்ப்பதால்
சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு
வாய்வுக்கள்
சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது.
இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக
மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள்
துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக
நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன
வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்
இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு
வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள்
குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக
நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன
வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு
உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல்
சூடு தணியும்.
வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு
(விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி
வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி
வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன்
சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி
வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க
வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து
வந்தால்
பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில்
சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
சிறுநீர் பெருக்கி
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக
நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை
இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு
பிரியும்.
சிறுநீரக நோய் வராது.
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில்
வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள்
ஆரோக்கியத்தோடு வாழலாம்.
##################################################
மூல நோய் விரட்ட02
எல்லாவகை மூல நோய்களுக்கும் பக்குவமான
மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும்
மருந்து.அதுதான் வேப்பமுத்து. அதன் பருப்பை
நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின்
அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட
வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு
அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும்.
இப்படியே
(ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள்
சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது,மூல
வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும்
வரை,உடல் உறவு கூடாது.சூடு உண்டாக்கி
மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறு
நல்லது.நாள்தோறும் அதிகாலையில்
ஒரு தம்ளர் குடித்து வரலாம்.